Home » , , , » வடக்குத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றி அவசியம் : சம்பந்தன் எம்.பி

வடக்குத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றி அவசியம் : சம்பந்தன் எம்.பி

சர்­வ­தே­சத்தின் நிலைப்­பாட்டை அறிந்தே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வட­மா­காண சபை முத­ல­மைச்சர் வேட்­பாளர் தெரிவு இடம்­பெற்­றது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கே சர்­வ­தே­சத்தின் ஆத­ரவும் மக்­களின் அங்­கீ­கா­ரமும் கிடைத்­துள்­ளன. எனவே, எந்த விலை கொடுத்­தா­வது கூட்­ட­மைப்பை பாது­காக்க வேண்­டி­யது எமது கட­மை­யாகும். வட மாகாண சபைத் தேர்தல் வர­லாற்று திருப்­பு­முனை வெற்­றி­யாக அமைய வேண்டும்.


நாம் அனை­வரும் இணைந்து இதற்­காக பாடு­ப­ட­வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் கோரி­யுள்ளார்.

இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் மத்­திய குழுக் கூட்டம் நேற்று முன்­தினம் வவு­னியா நக­ரி­லுள்ள வசந்தம் ஹோட்­டலில் இடம்­பெற்­றது. இக்­கூட்­டத்­துக்கு தலைமை வகித்து உரை­யாற்­று­கை­யி­லேயே சம்­பந்தன் எம்.பி. மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இங்கு அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்,

இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சி­யினை எவரும் அழித்­து­விட முடி­யாது. தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புக்கே சர்­வ­தேச ரீதி­யிலும் மக்கள் மத்­தி­யிலும் அங்­கீ­காரம் கிடைத்­துள்­ளது. இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் ஐக்­கி­யத்தை பேண வேண்­டி­யது எம் அனை­வ­ரதும் கட­மை­யாகும்.

வட­மா­காண சபைத் தேர்­தலில் வர­லாற்றுத் திருப்­பு­மு­னை­யான வெற்­றி­யினை நாம் பெற­வேண்டும் வட­மா­காண சபையில் உள்ள 36 உறுப்­பி­னர்­களில் 30 உறுப்­பி­னர்­க­ளை­யா­வது நாம் பெற வேண்டும். சர்­வ­தேச ரீதியில் பெரும் எதிர்­பார்ப்பை இந்த தேர்தல் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்தத் தேர்­தலில் நாம் வர­லாற்றுத் திருப்­பு­மு­னை­யான வெற்­றி­யினை பெற்­றால்தான் அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கைகள் குறித்து தீர்­மா­னிக்க முடியும்.

வட­மா­காண சபை தேர்­த­லுக்­கான முத­ல­மைச்சர் வேட்­பா­ளரில் ஜன­நா­யகம் பேணப்­ப­ட­வில்லை என்று யாரும் குற்­றம்­சாட்ட முடி­யாது. முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக நிய­மிக்­கு­மாறு கட்­சியின் செய­லாளர் மாவை சேனா­தி­ராஜா கோரிக்கை விடுக்­க­வில்லை. ஆனாலும் அவரும் இணைந்து நீதி­ய­ரசர் விக்­கி­னேஸ்­வ­ரனை வேட்­பா­ள­ராக தெரி­வு­செய்­துள்ளார். இங்கு பல­வந்­த­மாக முத­ல­மைச்சர் வேட்­பாளர் திணிக்­கப்­ப­ட­வில்லை. ஜன­நா­யக ரீதி­யி­லேயே தெரிவு இடம்­பெற்­றுள்­ளது.

ஜனா­தி­ப­தி­யுடன் கடந்­த­வாரம் நான் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்தேன். கடந்­த­வாரம் இந்­திய பாது­காப்பு ஆலோ­சகர் சிவ்­சங்கர் மேனன் இலங்கை வந்­தி­ருந்தார். அவர் ஜனா­தி­ப­தியை காலை 8 மணி­முதல் 10 மணி­வரை அல­ரி­மா­ளி­கையில் சந்­தித்து பேசி­யி­ருந்தார். அன்­றைய தினம் 10.30 மணி­ய­ளவில் ஜனா­தி­பதி என்னை தொலை­பேசி மூலம் தொடர்­பு­கொண்டு உட­ன­டி­யாக சந்­தித்து பேச வேண்­டு­மென கேட்­டுக்­கொண்டார். கூட்­ட­மைப்பு எம்.பி.க்களுடன் கலந்­து­ரை­யா­டிய பின்­னரே இது­கு­றித்து தீர்­மா­னிக்­க­லா­மென நான் அவ­ரிடம் கூறினேன். பின்னர் கூட்­ட­மைப்பு எம்.பி.க்களுடன் கலந்­து­ரை­யா­டிய பின்னர் சந்­திப்­புக்­கான நேரத்­தினை வழங்­கினேன். இந்தச் சந்­திப்­பின்­போது கூட்­ட­மைப்­புடன் தான் மீண்டும் பேச விரும்­பு­வ­தாக ஜனா­தி­பதி தெரி­வித்தார். இந்த சந்­திப்பில் பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கழு குறித்து அவர் எதுவும் பேச­வில்லை.

அர­சாங்­கத்­துடன் நாம் பேசு­வ­தற்கு தயா­ரா­கவே உள்ளோம். அர­சாங்கம் இந்தப் பேச்­சு­வார்த்­தை­யினை கப­டத்­த­ன­மாக நடத்­தி­னா­லும்­கூட நாம் பேச்­சு­வார்த்­தையில் கலந்­து­கொண்டு அரசாங்­கத்தின் செயற்­பாட்டை சர்­வ­தே­சத்­துக்கு எடுத்­துக்­காட்ட வேண்டும். நான் இனியும் பேச்சுவார்த்தையில் ஏமாறப்போவதில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே சர்வதேசம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. எனவே கூட்டமைப்பை பேணிப் பாதுகாப்பதற்கு எந்தவிலை கொடுக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும். வடக்கு மாகாணசபைக்கான வேட்பாளர் தெரிவில் விட்டுக் கொடுப்புகளை மேற்கொண்டு நாம் செயற்படவேண்டும் என்று தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com