Home » , , » விக்கினேஸ்வரனின் நியமனத்திற்கு தமிழரசுக் கட்‌சியின் மத்திய குழு வரவேற்பு; வெற்றிக்கு பணியாற்றவும் முடிவு

விக்கினேஸ்வரனின் நியமனத்திற்கு தமிழரசுக் கட்‌சியின் மத்திய குழு வரவேற்பு; வெற்றிக்கு பணியாற்றவும் முடிவு

முன்னாள் உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் வட­மா­காண சபைக்­கான முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­மையை வர­வேற்­றுள்ள இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் மத்­தி­ய­குழு அவ­ரது வெற்­றிக்கு பூரண ஒத்­து­ழைப்பு வழங்­கவும் தீர்­மா­னித்­துள்­ளது.



இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் மத்­தி­ய­குழுக் கூட்டம் நேற்று முன்­தினம் மாலை வவு­னியா நக­ரி­லுள்ள வசந்தம் ஹோட்­டலில் இடம்­பெற்­றது. கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் தலை­மையில் நடை­பெற்ற இந்த மத்­தி­ய­குழுக் கூட்­டத்தில் வட­மா­ காண சபைக்­கான முத­ல­மைச்சர் வேட்­பாளர் தெரி வில் மாவை சேனா­தி­ராஜா எம்.பி. மேற்­கொ ண்ட விட்­டுக்­கொ­டுப்பையும் நீதி­ய­ரசர் விக்­கி­னேஸ்­வ­ரனின் நிய­ம­னத்தையும் வர­வேற்று தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

இந்த தீர்­மா­னத்தினை மத்­திய குழு உறுப்­பி­னரும் கிழக்கு மாகா­ண­சபை உறுப்­பி­ன­ரு­மான கி. துரை­ரா­ஜ­சிங்கம் முன்­வைத்தார். இந்தத் தீர்­மா­னத்தை தமி­ழ­ரசுக் கட்­சியின் மத்­தி­ய­குழு ஏக­ம­ன­தாக ஏற்­றுக்­கொண்­டது.

தீர்­மா­னத்தை முன்­மொ­ழிந்த துரை­ரா­ஜ­சிங்கம், தற்­கால நாட்டு மற்றும் உலக நிலை­மை­யினைக் கருத்­தில்­கொண்டு பெரு­ம­ன­தோடு முத­ல­மைச்சர் வேட்­பாளர் விட­யத்தில் மாவை சேனா­தி­ராஜா எம்.பி. பெரும் விட்­டுக்­கொ­டுப்­பினை மேற்­கொண்­டுள்ளார். பலரும் தன்னை முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக நிறுத்த பிரே­ரித்­த­போ­திலும் உயர் நீதி­மன்ற முன்னாள் நீதி­ய­ரசர் விக்­கி­னேஸ்­வ­ரனை முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக நிய­மிக்க வேண்­டு­மென்று மாவை சேன­தி­ராஜா எம்.பி. விட்­டுக்­கொ­டுப்பை மேற்­கொண்­டுள்ளார். இதற்­காக மாவை சேனா­தி­ராஜா எம்.பி.யை தமி­ழ­ரசுக் கட்­சியின் மத்­தி­ய­குழு முழு­ம­ன­தோடு பாராட்­டு­கி­றது.

இதே­வேளை, இந்தப் பாரிய பொறுப்­பினை ஏற்று புத்­தி­ஜீ­விகள் அர­சி­ய­லுக்கு வர­வேண்டும் என்ற நிலையில் தமிழ் மக்­க­ளுக்கு சேவை செய்யும் நோக்கில் வட­மா­கா­ண­ச­பையின் கூட்­ட­மைப்பின் முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக பணி­யாற்ற முன்­வந்­துள்ள உயர்­நீ­தி­மன்ற முன்னாள் நீதி­ய­ரசர் சி.வி. விக்­கி­னேஸ்­வ­ரனை இந்த குழு பாராட்டி கௌர­வித்து வர­வேற்­கின்­றது என்று தெரி­வித்தார்.

இந்த தீர்­மா­னத்தின் முன்­மொ­ழி­வினை மத்­திய குழு ஏக­ம­ன­தாக ஏற்­றுக்­கொண்­ட­துடன் நீதி­ய­ரசர் விக்­கி­னேஸ்­வரன் தலை­மை­யி­லான கூட்­ட­மைப்பு வேட்­பா­ளர்­களின் வெற்­றிக்கு பூரண ஒத்­து­ழைப்பு வழங்கி செயற்­ப­டு­வ­தற்கும் தீர்­மா­னித்­தது.

இந்த மத்­தி­ய­குழுக் கூட்­டத்தில் தமி­ழ­ரசுக் கட்­சியின் முன்னாள் பொரு­ளா­ளரும் மத்­தி­ய­குழு உறுப்­பி­ன­ரு­மான எஸ்.ரி.ஆர் தியா­க­ராஜா கட்­சியின் செய­லாளர் மாவை சேனா­தி­ரா­ஜா­வுக்கும் தலைவர் இரா. சம்பந்­த­னுக்கும் பொன்­னாடை போர்த்தி கௌர­வித்தார்.

கூட்டம் ஆரம்­ப­மா­ன­தை­ய­டுத்து முத­ல­மைச்சர் வேட்­பாளர் நிய­மனம் தொடர்பில் கட்­சியின் தலைவர் சம்­பந்தன் மீது கடும் விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. இந்த விமர்­ச­னங்­க­ளை­ய­டுத்து இரா. சம்­பந்தன் எம்.பி. அதற்கு விளக்­க­ம­ளித்தார்.

மத்­தி­ய­குழுக் கூட்­டத்தில் பாரா­ளு­மன்ற உறு­ப­்பி­னர்­க­ளான எஸ். சிறி­தரன், இ. சர­வ­ண­பவான், எம்.ஏ. சுமந்­திரன், பொன். செல்­வ­ராசா, தமி­ழ­ரசுக் கட்­சியின் கொழும்புக் கிளையின் செய­லாளர் ந. வித்­தி­யா­தரன், யாழ். மாவட்ட கிளையின் மத்­தி­ய­குழு உறுப்­பி­னர்­க­ளான சி.வி.கே. சிவ­ஞானம், பொ. சிற்­றம்­பலம், மற்றும் கிழக்கில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­தி­லி­ருந்து மாகாண சபை உறுப்­பினர் கி. துரை­ரா­ஜ­சிங்கம் கட்­சியின் துணைத்­த­லைவர் சோம­சுந்­தரம் ஆகி­யோரும் அம்­பா­றை­யிலி­ருந்து கிழக்கு மாகா­ண­சபை உறுப்­பினர் கலை­ய­ரசன், திரு­மதி அன்­னம்மா, ஏகாம்­பரம் பரம் ஆகியோர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com