Home » , , » தமிழனின் நிர்வாகம் வேண்டுமெனில் அரசை ஆதரித்து வாக்களிக்காதீர்; வேட்பாளர் இம்மானுவேல்

தமிழனின் நிர்வாகம் வேண்டுமெனில் அரசை ஆதரித்து வாக்களிக்காதீர்; வேட்பாளர் இம்மானுவேல்

தமிழன் தன்னாட்சி கொண்ட நிர்வாகத்தை நடத்த வேண்டுமெனில் அரசுசார் கட்சிகளுக்கு வாக்களிக்கக்கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே அனைவரும் அணிதிரண்டு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் சார்பாகப் போட்டியிடும் இம்மானுவேல் ஆனல்ட். சாவகச்சேரி நகர சபைத் தலைவர் இ.தேவசகாயம்பிள்ளை தலைமையில் இடம்பெற்ற வேட்பாளர் அறிமுகம் மற்றும் வரவேற்பு விழாவின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.

 அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவித்ததாவது: அரச அதிகாரிகளும் கல்வியியலாளர்களும் பல்லைக்கழக மற்றும் மாணவர்களும் இந்த வடமாகாண சபைத் தேர்தலில் மிக அவதானமாகவும் நேர்த்தியாகவும் வாக்களிக்கத் துணிந்துவிட்டனர்.

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி உறுதியாகிவிட்டது. இந்த வெற்றிக்கான சமிக்ஞை இன்று நேற்று காட்டப்பட்ட ஒன்று அல்ல. போர் நடைபெற்று இன்று நான்கு ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. இந்த நான்கு ஆண்டுகளிலும்கூட மக்கள் கூட்டமைப்பைத்தான் ஆதரித்து வந்திருக்கிறார்கள்.

 இலங்கை அரசு கூறும் அபிவிருத்தி என்பது ஊடகங்களில் மட்டுமே காட்டப்படுகின்றது. அபிவிருத்தி எனக் கூறும் புல்லுருவிகள் எதை அபிவிருத்தி எனக் காட்ட முயல்கின்றனர் என்பது புரியவில்லை. எமது சமூகம் இன்றும் பொய் வாக்குறுதிகளில் ஏமாந்து வாழ்ந்து மடிந்துவிடக்கூடாது. அனைத்து தமிழின உணர்வாளர்களும் தலைநிமிர்ந்து நிற்க வேண்டுமாயின் தமிழ்த் தேசிய உணர்வுடன் தம்மை அர்ப்பணித்து செயலாற்ற முன் வர வேண்டும் - என்றார்.



0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com