Home » , , , » தேர்தல் காலத்தில் இராணுவத்தினரை முகாம்களுக்குள் முடக்க வேண்டும்: சி.வி.விக்கினேஸ்ரன்

தேர்தல் காலத்தில் இராணுவத்தினரை முகாம்களுக்குள் முடக்க வேண்டும்: சி.வி.விக்கினேஸ்ரன்

வடமாகாணசபை தேர்தல் காலங்களில் இராணுவத்தின் தலையீடுகள் இருக்கக்கூடாது. இராணுவத்தினர் முகாம்களுக்குள் முடக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்கினேஸ்வரன் வலியுறுத்தினார்.

 வடமாகாணசபைத் தேர்தல் தொடர்பாக மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற வேட்பாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் வடமாகாணசபை தேர்தலின் போது எந்தவொரு இராணுவத் தலையீடும் இன்றி மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க இடமளிக்கப்பட வேண்டும். இந்தத் தேர்தல் காலத்தில் இராணுவத்தினர் முகாம்களுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று கூறினார்.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com