Home » , , » யாழில் தனியார் பஸ்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் ஈபிடிபி!- உதவித் தேர்தல் ஆணையாளரிடம் முறையீடு

யாழில் தனியார் பஸ்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் ஈபிடிபி!- உதவித் தேர்தல் ஆணையாளரிடம் முறையீடு

யாழ். மாவட்டத்தில் வடமாகாண சபைத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈபிடிபி கட்சி முறைகேடான விதமாக நடந்து கொள்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்.உதவித் தேர்தல் ஆணையாளரிடம் முறையிட்டுள்ளனர்.

மாகாண சபைத் தேர்தலில் தனியார் பஸ்கள் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தப்படுவதாகவும் யாழ்.கொழும்பு செல்லும் தனியார் பஸ்களை இடைமறித்து அதற்குள் தேர்தல் பிரசுரங்களை வழங்கி வருவதாக தெர்தல் ஆணையாளரிடம் முறையிடப்பட்டுள்ளது.

 சில சந்தர்ப்பங்களில் ஈபிடிபி வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் தனியார் பஸ்கள் மீது போஸ்டர் ஒட்டி பாதாதைகளை தொங்க விட்டு தேர்தல் பிரசாரம் செய்வதாக முறையிடப்பட்டுள்ளது. அதனை எதிர்க்கும் பட்சத்தில் பஸ் ஊழியர்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 சட்டவிரோத தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் பஸ்கள் பிடிக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உதவித் தேர்தல்கள் ஆணையாளரிடம் முறையிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com