Home » , , » வடக்கு தேர்தலை குழப்புவதற்கு அரசாங்கம் முயற்சி; திஸ்ஸ அத்தநாயக்க

வடக்கு தேர்தலை குழப்புவதற்கு அரசாங்கம் முயற்சி; திஸ்ஸ அத்தநாயக்க

வடக்கு தேர்தல் குறித்து அரசாங்கம் அச்சமடைந்துள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

 அரசாங்கத்தின் பிழைகளை மூடி மறைத்துக் கொள்ளும் நோக்கிலேயே எதிர்க்கட்சி மீது சேறு பூசப்படுகின்றது எதிர்க்கட்சி பலவீனமடைந்துள்ளது குற்றம் சுமத்துவதனை விடவும், ஆளும் கட்சி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் வடக்கில் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என்பதனை அரசாங்கம் புரிந்து கொண்டுள்ளது.

வடக்கு தேர்தலை குழப்புவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சி மீது பல்வேறு குற்றச் சாட்டுக்களை சுமத்திய போதிலும், உண்மையில் அரச சொத்து துஸ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் விதி மீறல்களில் ஆளும் கட்சி ஈடுபட்டுள்ளது.

 அரசாங்கத்தின் எதேச்சாதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக பாரியளவில் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com