Home » , » இந்தியாவின் அடிமைகளாக கூட்டமைப்பு செயற்படுவது வடக்கு மக்களையே பாதிக்கும் : தேசிய சுதந்திர முன்னணி

இந்தியாவின் அடிமைகளாக கூட்டமைப்பு செயற்படுவது வடக்கு மக்களையே பாதிக்கும் : தேசிய சுதந்திர முன்னணி

அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தென் இந்தியாவின் கடல் வள ஆக்கிரமிப்பை பற்றி ஏன் பேசுவதில்லை? தென் இந்தியாவின் அடிமைகளாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் செயற்படுவதானது வடக்கு மக்களையே அதிகம் பாதிக்கும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் சபை உறுப்பினரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான மொஹமட் முசம்மில் தெரிவித்தார்.

 வடக்கு மக்களின் தேவைகளைப் பற்றி சிந்திக்காத சம்பந்தன் கூட்டணி எவ்வாறு தமிழர்களை பாதுகாக்கப் போகின்றது எனவும் அவர் தெரிவித்தார். அரசாங்கத்தைப் பற்றி தவறாக விமர்சிக்கும் சம்பந்தன், விக்னேஸ்வரன் போன்றோர் இந்தியாவின் செயற்பாடுகளை அனுசரித்து வாய் மூடிச் செயற்படுகின்றனர்.

 13ஆவது திருத்தச் சட்டம் மாகாண சபை போன்று இந்தியாவின் திட்டங்களை எமது நாட்டிற்குள் திணிக்கவிட்டு எம் நாட்டின் வளங்களையும் செல்வங்களையும் கொள்ளையடிக்கின்றனர். இதை நன்றாக விளங்கிக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் வாயை மூடி செயற்படுகின்றனர். அரசாங்கம் வடக்கு மக்களை ஒரு போதும் கைவிடப் போவதில்லை.

விக்னேஸ்வரன் சம்பந்தன் என எவர் நாட்டினைக் குழப்பினாலும் இந்த அரசாங்கம் யாரையும் விடப்போவதில்லை. பத்தரமுல்லையில் நேற்று தேசிய சுதந்திர முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.


0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com