Home » , » வடக்கில் வெளிநாட்டுக் கண்காணிப்புக் குழுக்கள் ; திங்கள் முதல் பணியில்

வடக்கில் வெளிநாட்டுக் கண்காணிப்புக் குழுக்கள் ; திங்கள் முதல் பணியில்

நடைபெறவுள்ள வடக்கு மாகாணசபைத் தேர்தலைக் கண்காணிப்பதற்காக, வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் வரும் திங்கட்கிழமை வடபகுதிக்குச் செல்லவுள்ளனர்.

 இவர்கள் வடக்கிற்குச் செல்வதற்கு முன்னதாக, கொழும்பில் ஐதேக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜேவிபி, ஜனசெத பெரமுன ஆகிய கட்சிகளின் தலைவர்களை சந்தித்துப் பேசவுள்ளனர்.

 இந்தக் கண்காணிப்புக் குழுவில், 27 வெளிநாட்டுப் பிரமுகர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் 7 பேர் கொமன்வெல்த்தில் இருந்தும், 20 பேர் தெற்காசிய தேர்தல் கண்காணிப்புக் குழுவில் இருந்தும் வந்துள்ளனர்.

தெற்காசிய கண்காணிப்புக் குழுவுக்கு இந்தியாவின் முன்னாள் தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி தலைமை தாங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது



0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com