வட மாகாண சபையினால் கோரப்பட்டுள்ள இரு திணைக்களங்களை நியமிப்பது தொடர்பில் வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி நிதி அமைச்சின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளார்.
வட மாகாண சபையின் கீழ் மோட்டார் போக்குவரத்து மற்றும் வீடமைப்புத் திணைக்களங்களை புதிதாக உருவாக்குவதற்கான கோரிக்கைகளை வட மாகாண சபை கோரியிருந்தது. இந்நிலையிலேயே குறித்த இரு திணைக்களங்களையும் உருவாக்குவதற்கான ஆலோசனைகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்குமாறு நிதியமைச்சின் கீழ் இயங்கும் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திற்கு எழுத்து மூலமான கோரிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வட மாகாண சபையினால் கோரப்பட்டுள்ள இரு திணைக்களங்களை உருவாக்குவது தொடர்பிலும் அதற்கான நியதிச் சட்டங்களை உருவாக்குவது தொடர்பிலும் உரிய நடவடிக்கை மேற்க்கொள்ளுமாறு வடமாகாண சபைக்கு ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
இந்நிலையிலேயே மேற்படி இரு பிரிவுகளையும் அதிகார சபையாகவோ அல்லது திணைக்களமாகவோ நிறுவுவது தொடர்பில் தேவையான ஒத்துழைப்பை மாகாண சபைக்கு வழங்குமாறு நிதியமைச்சின் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திற்கு ஆளுநர் எழுத்து மூலமான கோரிக்கையை விடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment