தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அதன் எம்.பிக்களையும் வடக்கு,கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களையும் வவுனியாவில் இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்துபேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
அரசியல் நிலைமைகளையும், அவர்களின் செயற்பாடுகளின் முன்னேற்றத்தையும் மதிப்பாய்வு செய்யும் வகையிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
வடமாகாண சபை தேர்தலின் பின்னர் ஒரு பொதுவான கருத்தாடலுக்கான வாய்ப்பாக இந்த கலந்துரையாடல் அமையுமென தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அரசாங்கத்துக்கு 19 உறுப்பினர்கள் உள்ளனர். நாம் போனால் எமக்கு நான்கு இடங்கள் கிடைக்கும்.
இதனால் எமது கருத்து எடுபடாது போகும். இந்நிலையில் நாம் ஒரு தீர்வில் ஈடுபாடின்றி இருக்கின்றோம் என்பது இதன் பொருளாகாது என்றும் அவர் கூறினார்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment