ஜனாதிபதி, அமைச்சர்கள் மற்றம் திணைக்களங்களில் பிரதானிகளுக்கு இந்த சுற்றறிக்கையின் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலங்களில் தேர்தல்கள் ஆணையாளருக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்த சுற்றறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இவ்வாறான அரசாங்க சொத்துக்கள் கட்சிகளின் தேர்தல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டிருந்தமையை கருத்தில் கொண்டே இந்த சுற்றறிக்கை முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தேர்தல் நடைபெறும் மாகாணங்களில் அரசாங்க அதிகாரிகளுக்கான பதவி நியமனங்கள், இடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுர்களை தேர்தல் நடைபெறும் காலப்பகுதியில் வழங்க கூடாது என்றும் இந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஊழல் மோசடிகளில் ஈடுபடுவோரை தேர்தலில் நிறுத்த வேண்டாம்: ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல்
ஊழல் மோசடிகளில் ஈடுபடுவோரை தேர்தலில் நிறுத்த வேண்டாம் என ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் அமைப்பு, அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வடமேல், வடக்கு மற்றும் மத்திய மாகாணசபைத் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவின் போது ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கக் கூடாது.
கடந்த ஒராண்டு காலப்பகுதில் பிரதேச சபை மற்றும் மாகாணசபை அரசியல்வாதிகளில் 50க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டுள்ளார்கள்.
குற்றச் செயல்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளுக்கு சந்தர்ப்பம் வழங்குவது மக்கள் பிரதிநிதிகளை தெரிவதில் குழப்ப நிலைமையை ஏற்படுத்தும். இது நாட்டுக்கும் சமூகத்திற்கும் இழைக்கப்படும் துரோகமாகவே கருதப்பட வேண்டும்.
அரசியல்வாதிகளின் சொத்து விபரங்களை திரட்டி அவர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என ட்ரான்பெரன்சி இன்டர்நெசனல் அமைப்பு கோரியுள்ளது.





.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment