Home » , , » முன்னாள் போராளிகள் இருவரை களமிறக்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தெரிய வருகின்றது.

முன்னாள் போராளிகள் இருவரை களமிறக்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தெரிய வருகின்றது.

வட மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் போராளிகள் இருவரை போட்டியிடவைப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாகவும் இதுதொடர்பிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.


 இதற்கான ஏற்பாடுகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றின் சட்டத்தணி ஒருவர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிய வருகின்றது. இந்த இரண்டு முன்னாள் போராளிகளில்; தமிழரசுகட்சி சார்பாக ஒருவரும் ரெலோ அமைப்பின் சார்பில் ஒருவருமாக யாழ் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாகவும் கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கிறன.

 ஏற்கெனவே, விடுதலைப்புலிகளின்; ஊடகப்பேச்சாளர் தயாமாஸ்டர் சுதந்திரக்கட்சியில் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக்;கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்.

இந்நிலையிலேயே கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் போராளிகள் இருவரை களமிறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை, இந்த தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதி ஒருவரையும் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com