துறைநீலாவணை மத்திய விளையாட்டுக் கழகம் நடத்திய மின்னொளியிலான மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அங்கு மேலும் பேசுகையில், கொங்கிறீட் வீதிகள் தருவோம், வீடுகள் தருவோம், வேறு பல வசதிகளை செய்து தருவோம் என்று நாம் அரசியல் செய்யவில்லை.
மாறாக 62 வருட காலமாக பல கோணங்களில் போராடி வரும் எமது இனத்தின் விடுதலையை வென்றெடுப்பதே எமது நோக்கமாகும். தமிழ்த் தேசியத்திற்காக அளப்பரிய பங்களிப்பை நல்கி வரும் துறைநீலாவணை கிராமத்திற்கு 2004ஆம் ஆண்டு நான் பாராளுமன்ற உறுப்பினரான காலம் தொட்டு இன்று வரை ஆண்டு தோறும் எனக்குக் கிடைக்கும் வரவு – செலவு திட்ட நிதியில் பண ஒதுக்கீடு செய்து வருகின்றேன்.
இன்றைய காலகட்டத்தில் தமிழினத்தின் போராட்ட வடிவம் இராஜதந்திர ரீதியில் கூர்மை அடைந்துள்ளது. இதன் மூலம் எமது மக்களுக்கான அரசியல் அதிகாரத்தைப் பெறும் காலம் நெருங்கி வருகிறது. ஆகவே, நாம் ஒன்றுபட்ட சக்தியாக இருக்க வேண்டும் என்றார்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment