Home » , , , » சரியான தருணத்தில் மகிந்தவுக்கு பதிலடி; காணி, பொலிஸ் தொடர்பில் -கூறுகிறார் சம்பந்தன்

சரியான தருணத்தில் மகிந்தவுக்கு பதிலடி; காணி, பொலிஸ் தொடர்பில் -கூறுகிறார் சம்பந்தன்

காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு உரிய நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிலடி கொடுக்கும். இவ்வாறு காட்டமாகத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன். "காணி, பொலிஸ் அதிகாரங்களை என்னிடமிருந்து எவரும் எடுத்துவிட முடியாது. அதை விட்டுக் கொடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. அரசமைப்பில் இந்த அதிகாரங்கள் குறித்து தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது'' என்று, பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் நிர்வாகிகளை நேற்றுமுன் தினம் அலரிமாளிகையில் சந்தித்துப் பேச்சு நடத்திய போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ தெரிவித்திருந்தார்.

 ஜனாதிபதியின் இந்தக் கருத்துத் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதில் கருத்து என்ன வென்று அதன் தலைவர் இரா.சம்பந்தனிடம் நேற்று "உதயன்' வினாவியது. இதற்குப் பதிலளிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: ஜனாதிபதி, தான் நினைக்கும் நேரங்களில் ஒவ்வொன்றைச் சொல்லி வருகின்றார்.

 அவரின் ஒவ்வொரு வேறுபட்ட கருத்துகளுக்கும் நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. காணி, பொலிஸ் அதிகாரங்கள் முக்கியமான விடயங்கள். இவை குறித்து தற்போது ஜனாதிபதி, தெரிவிக்கும் கருத்துக்களைப் பற்றி நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ­வுக்கு உரிய நேரத்தில் தமிழ்க் கூட்டமைப்பு பதிலடி கொடுக்கும். அது வரை பொறுத்திருங்கள் என்று தெரிவித்தார் சம்பந்தன்.


0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com