மட்டக்களப்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் வாழும் சகல தமிழ் மக்களும், கூட்டமைப்பிற்கு பின்னால் அணித்திரண்டு தமிழர்களின் பலத்தை நிரூபித்து காட்ட வேண்டும். இது காலத்தின் தேவை.
போர் நடைபெற்ற காலத்தில் புலிகள் ஆயுதரீதியில் பலமாக இருந்தனர். இதனால் இன்றைய ஜனாதிபதி, போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக, தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்க 13 பிளஸ் ஆக அதிகரித்து, மாகாண சபையை பலமிக்க சபையாக மாற்ற வேண்டும் எனக் கூறினார்.
ஆனால் மாகாண சபைகள் காணி, பொலிஸ் அதிகாரங்கள் இன்றி குறைமாத குழந்தைகள் போல் உள்ளன.
இந்த குறைமாத குழந்தையையும் அழித்து விட வேண்டும் என்று அமைச்சர் விமல் வீரவன்ஸ, ஜாதிக ஹெல உறுமய கட்சித் தலைவர்கள் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றனர்.
இதன் மூலம் அரசாங்கத்தின் உண்மையான முகம் என்ன என்பது புலனாகியுள்ளது என்றார்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment