Home » , , » மூன்று மாகாண சபைகளிலும் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டி

மூன்று மாகாண சபைகளிலும் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டி

வட மாகாணம் வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதையே அக்கட்சி பேராளர்கள் விரும்புகின்றனர்.


எவ்வாறாயினும் வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுமென்பது பெரும்பாலும் உறுதியாகி விட்டதென்றும் வட மாகாண சபையைப் பொறுத்த வரையில் சமுர்த்தி முகவர்கள் நியமனத்தால் அங்குள்ள சிலரும் அரச தரப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட வேண்டுமென பேரம் பேசுவதாக அக்கட்சி வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.

இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் அதி உயர் பீடம் நாளை திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு கூடுகின்றது. இக்கூட்டத்தில் மாகாண சபைகள் தனித்துப் போட்டியிடுவதா இணைந்து போட்டியிடுவதா என்பது குறித்து இறுதித்தீர்மானம் எடுக்கப்படுமென அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com