Home » , , » மாகாண சபை தேர்தல்; தற்காலிக அடையாள அட்டை வழங்க நடவடிக்கை

மாகாண சபை தேர்தல்; தற்காலிக அடையாள அட்டை வழங்க நடவடிக்கை

மாகாண சபைத் தேர்தல்களில் வாக்களிக்க ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இல்லாதவர்கள் தமது பகுதி கிராம சேவகரிடம் தற்காலிக ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணமொன்றை பெற்றுக்கொள்ள முடியுமென தேர்தல்கள் திணைக்களம் தெரிவிக்கின்றது.


 கிராம சேவகரிடம் தற்காலிக ஆளடையாளத்தை உறுதிப்படுத்த விரும்புபவர்கள் 1x1¼ சென்ரி மீற்றர் புகைப்படத்தையும் தமது பெயர் மற்றும் விபரங்களையும் தெரிவிக்க வேண்டும்.

 தேர்தல்களில் வாக்களிக்க தேசிய அடையாள அட்டை, செல்லுபடியான கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், ஓய்வூதிய அடையாள அட்டை ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்கூறிய ஆவணங்கள் இல்லாதவர்கள் கிராம சேவகரிடம் ஆளடையாளத்தை நிரூபிக்கும் தற்காலிக ஆவணத்துக்கு விண்ணப்பிக்க முடியும்.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com