வடமாகாண சபைத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவினை தமிழ் தேசியக்கூட்டமைப்பு இன்று திங்கட்கிழமை காலை தாக்கல் தாக்கல் செய்தனர்.
-இன்று காலை 11.45 மணியளவில் மன்னார் மாவட்ட டெலோ தலைமை அலுவலகத்தில் இருந்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் வேட்பாளர்கள்,ஆதரவாளர்கள்,நகர சபை,பிரதேச சபை ஆகியவற்றின் தலைவர்கள்,உப தலைவர்கள்,உறுப்பினர்கள்,வர்த்தகர்கள் என ஆயிரக்கணக்காணவர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக மன்னார் பஸார் பகுதியை சென்றடைந்தனர்.
இதன் போது ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தி வேட்பாளர்களை வரவேற்றனர்.
இதனைத்தொடர்ந்து தந்தை செல்வாவின் சிலைக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநதான் மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்களும் மாலை அனுவித்து மரியாதை செலுத்தினர். வேட்பாளர் வைத்தியர் ஞானசீலன் குனசீலன் தலைமையினான மூன்று வேட்பாளர்கள் மதியம் 12.05 மணியளவில் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
-வேட்பு மனுத்தாக்கள் முடிவடைந்த நிலையில் குறித்த குழுவினர் மன்னார் ஆயர் இராயப்பு ஜேசேப்பு ஆண்டகை மற்றும்,இந்து மத குரு ஐங்கர சர்மா ஆகியோரை நேரடியாக சென்று சந்தித்து ஆசி பெற்றனர்.
-தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பாக மன்னார் மாவட்டத்தில் வைத்தியர் ஞானசீலன் குனசீலன்,எஸ்.சிவகரன் , சட்டத்தரணிகலான எஸ்.பிரிமூஸ் சிராய்வா,பி.டெனிஸ்வரன்,ஜே.அனந்தன் குரூஸ்,கே.விமல சேகரம்,இ.சால்ஸ்,அயூப் அஸ்மி ஆகியோர் போட்டியிருகின்றமை குறிப்பிடத்தக்கது.





.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment