இம்முறை மாகாணசபைத் தேர்தலின் போது அரசாங்கம் கௌரவமான முறையில் அரசியல் நடாத்தத் திட்டமிட்டுள்ளது.
நியாயமான முறையில் தேர்தலை நடாத்தி ஏனைய கட்சிகளக்கு முன்னுதாரணமாக திகழ உத்தேசித்துள்ளோம்.
வடக்கின் சுதந்திரத்தை உறுதி செய்யும் நோக்கில் தேர்தல் நடத்தப்படுகின்றது. பிரதேசத்தின் அபிவிருத்தியை மேற்கொண்டு, ஜனநயாகத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
எதிர்க்கட்சிகளின் போட்டிகள் எதுவுமில்லை, எனவே போட்டியின்றி வெற்றியீட்டக் கூடிய வாய்ப்ப காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொஸ்கம பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்கு இடமாற்ற உத்தரவு
கொஸ்கம பொலிஸ் நிலையத்தில் கடயைமாற்றிய உத்தியோகத்தர்களுக்கு திடீர் இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய பிரதேசங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஸ் பெரேராவினால் இந்த இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரதேசத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படாமையே இதற்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக யகடா என்னும் பாதாள உலகக் குழுத் தலைவரை கைது செய்யாது அவரிடம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யகடயாவின் மனைவி கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும் அதனை தடுத்து நிறுத்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
விசாரணை நடாத்தி சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பதிலாக குற்றவாளிகளிடம் லஞ்சம் பெற்று அவர்களுடன் நட்புறவாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொஸ்கம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அனைவரும் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment