Home » , , » த.தே.கூ வேட்பாளர் ஐங்கரநேசனின் அலுவலகம் மீது ஒயில் வீச்சு

த.தே.கூ வேட்பாளர் ஐங்கரநேசனின் அலுவலகம் மீது ஒயில் வீச்சு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரின் அலுவலகத்தின் மீது இனந்தெரியாதோர் ஒயில் வீசித் தாக்கக்கட்டுள்ளது. எதிர்வரும் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள வடமாகாண சபைக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் ஐங்கரநேசனின் அலுவலகம் மீது இனந்தெரியாதோரால் ஒயில் வீசி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, திருநெல்வேலியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்திற்கு முன்னால் நள்ளிரவு 4 மோட்டார் சைக்கிளில் வந்தவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அலுவலக கேற், மதில் மற்றும் உள்ளே இருந்த சிறிய ஆலயம் ஒன்றின் மீதும் ஒயிலை ஊற்றிவிட்டு பூசணிக்காயையும் வெட்டி குங்குமம் இட்டு வாசலில் வைத்துவிட்டு சென்றுள்ளனர்.

இது தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com