Home » » வன்னியில் கூட்டமைப்பின் சுவரொட்டிகளை அகற்றும் நடவடிக்கையில் படையினர்தீவிரம்!

வன்னியில் கூட்டமைப்பின் சுவரொட்டிகளை அகற்றும் நடவடிக்கையில் படையினர்தீவிரம்!

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் கூட்டமைப்பின் வேட்பாளர்களின் ஆதரவாளர்களினால் ஒட்டப்படுகின்ற சுவரொட்டிகளை மற்றும் துண்டுபிரசுரங்களை அகற்றும் நடவடிக்கையில் படையினரும் காவல்துறையினரும் மும்மூரமாக ஈடுபட்டுள்ளார்கள்.

 வடமாகாண தேர்தலில் போட்டியிடவுள்ள கூட்டமைப்பின் வேட்பாளர்களினதும சுவரொட்டிகள் அண்மைய நாட்களாக ஆதரவாளர்களினால் பரவலாக ஒட்டப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் அதற்கு எதிராக சிறீலாங்காஅரசின் சிறீலங்கா சுதந்திர மக்கள் முன்னணி போன்ற கட்சிகளும் சுவரொட்டிகளை ஒட்டுகின்றன எனினும் தற்போது அவற்றை அகற்றும் நடவடிக்கையில் படையினரும் சிறீலங்கா காவல்துறையினரும் ஈடுபட்டுள்ளார்கள்.


 தமிழ்தேசியக்கூட்டமைப்பு வேட்பாளர்களின் சுவரொட்டிகளே கிழித்தெறியப்பட்டும் கழிவு எண்ணைய் பூசப்பட்டும் காணப்படுவதாகவும் அரசுக்கு சார்பான தேர்தல் வேட்பாளர்களின் சுவரொட்டிகள் அகற்றப்படாத நிலையில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com