Home » , , , » சு.கட்சியின் ஆதரவாளர் மீது தாக்குதல்: தாக்கியவர்கள் விடுதலை

சு.கட்சியின் ஆதரவாளர் மீது தாக்குதல்: தாக்கியவர்கள் விடுதலை

யாழ்.சாவகச்சேரி பிரதேசத்தில் வைத்து சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர் மீது தாக்குதல் நடத்திய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இருவர்  சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 யாழ்.சாவகச்சேரி பகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் அங்கஜன் இராமநாதனுக்கு ஆதரவாக பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இளைஞன் மீது அப்பகுதிக்கு வந்த உறுப்பினர்கள் இருவர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 இது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து இரண்டு உறுப்பினர்களும் நேற்று சனிக்கிழமை இரவு சாவகச்சேரி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

 இவ்வாறு கைதுசெய்யபட்டவர்களின் குடும்பங்கள் சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜனிடம் விடுத்த வேண்டுகோளையடுத்து இரு தரப்பினரும் இணக்கப்பாட்டிற்கு வந்ததிற்கு இணங்க சனிக்கிழமை மேற்படி பிரதேசசபை உறுப்பினர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com