தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் 51 வேட்பாளர்களுக்கான தேர்தல் பற்றிய அறிவுறுத்தல் கருத்தரங்கு
கிளிநொச்சி கரைச்சிப் பிரதேசசபை மண்டபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களது தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேற்படி நிகழ்வினை மங்கல விளக்கேற்றி வட மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களும் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா அவர்களும் ஆரம்பித்து வைத்தனர்.
நிகழ்வுச் சுடரினை பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா சுரேஸ் பிரேமச்சந்திரன் சிவசக்தி ஆனந்தன் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி சட்ட விரிவுரையாளர் வி.ரி தமிழ்மாறன் அபிராமி ஆகியோர் ஏற்றி வைத்தனர்.
இந் நிகழ்வில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நகர சபை, பிரதேச சபை தலைவர்கள் வடக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
நிகழ்ச்சி நிரல் இணைக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment