Home » , » சாவ­கச்­சேரி துப்­பாக்கிச்சூட்­டு ­சம்­பவ­ம் சு.க. வேட்பாளர் அங்கஜனின் தந்தை கைது

சாவ­கச்­சேரி துப்­பாக்கிச்சூட்­டு ­சம்­பவ­ம் சு.க. வேட்பாளர் அங்கஜனின் தந்தை கைது

சாவ­கச்­சே­ரியில் இடம்­பெற்ற துப்­பாக்கிச்சூட்டுச் சம்­பவம் தொடர்­பாக சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் யாழ். மாவட்ட அமைப்­பாளர் அங்­க­ஜனின் தந்­தை­யான இரா­ம­நா­தனை பொலிஸார் நேற்று மாலை 5.15 மணி­ய­ளவில் கைது செய்­துள்­ளனர் என யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்து கரு­ணா­ரட்ண தெரி­வித்தார்.

 சாவ­கச்­சேரிப் பகு­தியில் நேற்று முன்­தினம் இரவு 7.30 மணி­ய­ளவில் அங்­கஜன் இரா­ம­நாதன் குழு­வி­னரும் அக்­கட்­சியைச் சேர்ந்த சர்­வ­ானந்­தாவின் குழு­வி­ன­ருக்கும் இடையில் இடம்­பெற்ற வாக்­கு­வா­தத்­தின்­போது துப்­பாக்கிப் பிர­யோ­கத்­தினால் சர்­வா­னந்­தாவின் வாக­னச்­சா­ர­தியும் அங்­க­ஜனின் பாது­காப்புப் பிரிவுப் பொலி­ஸ் உத்தியோ கத்தரும் கா­ய­ம­டைந்­துள்­ளனர்.

 இத்­தாக்­கு­தலின் பின்­ன­ணியில் சர்­வா­னந்தா பதிவு செய்த முறைப்­பாட்­டிற்கு அமைய இரா­ம­நா­தனை பொலிஸார் நேற்று மாலை 5.15 மணி­ய­ளவில் கைது செய்­துள்­ளனர். இதே­வேளை இத்­தாக்­கு­தலை நடத்­தி­யவர் என சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்ற இரா­ம­நா­தனைச் கைது­செய்­யா­து­விடின் கட்சி நட­வ­டிக்­கை­க­ளி­லி­ருந்து வில­கப்­போ­வ­தாக ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பில் வட­மா­காண சபைத் தேர்­தலில் போட்டியிடுகின்ற ஏனைய நான்கு உறுப்பினர்களான சர்வானந்தா, அகிலதாஸ், றெமிடியஸ், பொன்னம்பலம் ஆகியோர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com