Home » , , » யாழில் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட சுயேட்சைக் குழுவினர் நீதிமன்றத்தை நாட முடிவு

யாழில் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட சுயேட்சைக் குழுவினர் நீதிமன்றத்தை நாட முடிவு

வடமாகாண சபைக்கான வேட்பு மனு யாழ்ப்பாணத்தில் நிராகரிக்கப்பட்ட சுயேட்சைக்குழுவினர் நீதிமன்றத்தை நடாவுள்ளதாக அதன் முதன்மை வேட்பாளர் முருகன் குமாரவேல் தெரிவித்துள்ளார்.

தமது கட்சியினர் வேட்பு மனுவினைத் தாக்கல் செய்யும் போது உறுப்பினர் ஒருவருடைய சத்தியக்கூற்று ஆனத்தின் கீழ் விழுந்து விட்டது. இதனை அவதானித்த இன்னொரு உறுப்பினர் அதனை கண்டு மீண்டும் தெரிவத்தாட்சி அலுவலரிடம் ஒப்படைத்தோம்.

ஆனால் அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் இந்தக் காரணத்தினால் எமது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை ஏற்க முடியாது இதனால் நீதிமன்றத்தை நாடவுள்ளோம் என்றார்.

 இதேவேளை இரண்டு அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com