அல்லது தான்தோன்றித்தனமாக செயற்பட்டு இலங்கை - இந்திய உடன்படிக்கையை இரத்துச் செய்யவோ முயற்சிக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பி.யுமான இரா.சம்பந்தன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வடக்கிலே நிலவியுள்ள காணிப்பிரச்சினையானது எதிர்காலத்தில் பாரிய விளைவுகளுக்கு வழி வகுக்கும் என்பதால் அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் அங்கு நிலவும் நீதியற்றதும்
நியாயமற்றதுமான நிலைமைக்கு தீர்வு காணுமாறும் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அமர்வின் போது வடக்கு, -கிழக்கில் எழுந்துள்ள காணி விவகாரம் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். பிரேரணையை சமர்ப்பித்த அவர் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக உரை நிகழ்த்தியதுடன் வடக்கு, கிழக்கில் இடம்பெற்று வரும் காணி சுவீகரிப்பு, இராணுவ மற்றும் சிங்களக்குடியேற்றம் உள்ளிட்ட விடயங்களை புள்ளிவிபரங்களுடனும் முன் வைத்தார்.
சம்பந்தன் எம்.பி. இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
வடக்கிலும் திருகோணமலையிலும் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணி விவகாரத்தில் நிலவி வரும் சிக்கல் நிலைமைகள் காணி அபகரிப்புகள் மக்களின் விவசாய வாழ்வாதார நிலைமைகள் தொடர்பில் நாம் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் பல தடவைகளில் எடுத்துரைத்துள்ளோம் எனினும் இதுவரையில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் துணியவில்லை என்று தெரிவித்தார்.
இந்தப் பிரச்சினைக்கு கலந்துரையாடல்கள் மூலம் தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்காகவே இந்த விவகாரத்தை பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்துள்ளோம் எனக் குறிப்பிட்டார்.
வலிகாமம் வடக்கில் 6300 ஏக்கர் காணிகள் அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ளன. இது கொழும்பு மாவட்டத்தின் மூன்றில் இரண்டு மடங்காகும். இந்த காணிகளைக் மீளப்பெற்றுக்கொள்ளும் வகையில் உரிமையாளர்கள் வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.
அத்துடன் முன்னாள் அமைச்சர் லக் ஷ்மன் கதிர்காமரின் மகனும் தனது காணி சுவீகரிக்கப்பட்டிருக்கின்றமைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளார். உயர் பாதுகாப்பு வலயம் என்ற தோரணையில் வடக்கிலும் சம்பூரிலும் பல காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டார்.
சம்பூரைப் பொறுத்தவரையில் அனல் மின் நிலையத்துக்கு தேவையான காணியைத் தவிர ஏனைய காணிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என ஜனாதிபதியினால் உறுதியளிக்கப்பட்டது. ஆனாலும் அது இதுவரையில்
இடம்பெறவில்லை. அங்கு 1400 குடும்பங்களுக்கு சொந்தமான காணிகள் இன்னும் வழங்கப்படவில்லை என்றார்.
முல்லைத்தீவில் கேப்பாப்பிலவு, ஒட்டிசுட்டான் மற்றும் மாங்குளம் போன்ற பகுதிகளிலும் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் சுவீகரிக்கப்பட்டு இராணுவ முகாம்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று தலைமன்னாரில் 30 ஏக்கர் காணி கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும் கிளிநொச்சியில் பத்தாயிரம் வீடுகள் இராணுவத்துக்காக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன எனக் குறிப்பிட்டார்.
வெல்லங்குளத்தில் 600 ஏக்கரில் கஜு உற்பத்தியும் 100 ஏக்கர் நிலத்தில் தென்னையும் பயிரிடப்பட்டுள்ளது. விவசாய உற்பத்திகளில் இராணுவம் ஈடுபட தேவையில்லை. இராணுவத்தின் விவசாய நடவடிக்கைகளுக்கு அனைத்து உதவிகளும் பெற்றுக் கொடுக்கப்படுகின்றன. ஆனாலும் பொதுமக்கள் தமது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதுள்ளனர் என்றார்.
அபிவிருத்தி என்ற பெயரிலேயே காணி ஆக்கிரமிப்புகள் இடம்பெற்று வருகின்றன. யாழ்ப்பாணத்தில் பாரிய காணி ஆக்கிரமிப்பினை மேற்கொண்டுள்ள அரசாங்கம் அங்கு இராணுவத்தைக் கொண்டு யோகட் உற்பத்தி மேற்கொள்கின்றது எனக் குறிப்பிட்டார்.
கிண்ணியாவில் சுடுநீர்க் கிணறு என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். எனினும் அங்கிருந்த பிள்ளையார் கோயில் அகற்றப்பட்டு அங்கு புத்தர் அமர்ந்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. இவ்விடயம் தொடர்பில் அமைச்சருக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தி தலையீடு செய்து ஆராயுமாறு கோரிய போதும் அது பற்றி கவனம் ெசலுத்தப்பட்டிருக்கவில்லை எனக் குறிப்பிட்டார்.
இவ்வாறு தமிழ் மக்களுக்கு ச ந்தமான காணி விடயம் தொடர்பில் எமது முறைப்பாடுகள் எதுவும் கவனத்திற்கொள்ளப்படவில்லை.
இன்று அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் மக்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் இருந்து வருகின்றன என்று குறிப்பிட்டார்.
ஐ.நா. செயலாளர் நாயகத்துடன் இணைந்து ஜனாதிபதி கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதன் போது அதிகாரப்பகிர்வு குறித்தும் 13 ஆவது திருத்தம் மற்றும் 13+ குறித்தும் பல்வேறு உறுதி மொழிகள் வழங்கப்பட்டன என்றும் தெரிவித்தார்.
அது மாத்திரமன்றி, இந்தியாவுடன் பேச்சுக்களை நடத்திய ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களும் 13+ குறித்து பிரஸ்தாபித்தனர். அது மாத்திரமின்றி வெளிவிவகார அமைச்சு, இந்திய வெளிவிவகார அமைச்சு மட்டத்திலும் பேச்சுக்கள் இடம்பெற்ற சந்தர்ப்பங்களில் 13+ குறித்தும் அதிகாரப்பகிர்வு குறித்தும் உறுதி மொழிகள் பரிமாறப்பட்டன என்று குறிப்பிட்டார்.
இவ்வாறு ஐ.நா. விலும் சர்வதேச நாடுகளிடமும் அதிகாரப் பகிர்வு குறித்து 13க்கு அப்பால் சென்று அதிகாரங்களை வழங்கி பிரச்சினைக்கு தீர்வு காணப் போவதாகவும் உறுதியளித்திருக்கின்ற நிலையில் தான் தோன்றித்தனமாக செயற்பட்டு 13 ஆவது திருத்தத்தை புறக்கணிக்கவோ அல்லது இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை இரத்துச் செய்யவோ முடியாது என்று தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு காணி விவகாரம் தொடர்பில் நாம் பல முறை அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் எடுத்துக் கூறியிருந்தும் எமக்கு சரியான பதிலும் கிடைக்கவில்லை. தீர்வும் பெற்றுக் கொடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
மேற்படி காணிப் பிரச்சினையானது எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் எனவே நீதியற்றதும் நியாயமற்றதுமான இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று கோருகின்றேன் என்றார்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment