Home » » வட மாகாண தமிழ் மக்கள் அரசின் அபி­வி­ருத்தி என்ற மாயைக்குள் சிக்­குண்டு உணர்­வு­களை இழக்­க­மாட்­டார்கள்.-கிழக்கு மாகாண சபை உறுப்­பினர் பேரா­சி­ரியர் எம். இரா­ஜேஸ்­வரன்

வட மாகாண தமிழ் மக்கள் அரசின் அபி­வி­ருத்தி என்ற மாயைக்குள் சிக்­குண்டு உணர்­வு­களை இழக்­க­மாட்­டார்கள்.-கிழக்கு மாகாண சபை உறுப்­பினர் பேரா­சி­ரியர் எம். இரா­ஜேஸ்­வரன்

வட மாகாண தமிழ் மக்கள் உயிர்,சொத்­தி­ழப்­பு­களை சந்­தித்­த­வர்கள். அவர்கள் அரசின் அபி­வி­ருத்தி என்ற மாயைக்குள் சிக்­குண்டு உணர்­வு­களை இழக்கமாட்­டார்கள்.  தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு வாக்­க­ளித்து இலங்கை தேசத்­தையும், சர்­வ­தே­சத்­தையும் வியக்க வைக்­க­வுள்­ளனர்.

இதனை நாம் எதிர்­வரும் செப்­டெம்பர் 21ஆம் திகதி உணர்ந்து கொள்ள முடியும் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்­பினர் பேரா­சி­ரியர் எம். இரா­ஜேஸ்­வரன் குறிப்­பிட்டார்.

திருக்­கோவில், கோரைக்­க­ளப்பு, சமா­திப்­பிள்­ளையார் ஆலய முன்­றலில் நடை­பெற்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஆத­ர­வா­ளர்­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­டலில் கருத்­து­ரைக்­கும்­போது அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் மேலும் பேசு­கையில்:

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வெற்றி என்­பது வெறு­மனே தேர்தல் வெற்றி அல்ல. சிறு­பான்மை இனங்­க­ளுக்­கெ­தி­ராக பெரும் பூத­மாக வெளிக்­கி­ளம்­பி­யுள்ள சிங்­கள பெளத்த தீவி­ர­வா­தத்­திற்கு அதிர்ச்­சியை கொடுக்கும் வர­லாற்றில் எழு­தப்­ப­ட­வுள்ள ஒரு பெறு­பே­றாக தேர்தல் முடிவு அமையும்.

வட­பு­லத்தில் வாழும் எமது சகோ­தர, சகோ­த­ரிகள், சிறு­பான்மை இனங்கள் சுதந்­தி­ர­மா­ன­வர்கள்.  அடி­மைகள் அல்ல என்­பதை உல­க­றிய வைக்­க­வுள்­ளனர். இத்­தேர்தல் மூலம் தமது உள்ளக் கிடக்­கை­களை மஹிந்த ராஜ­பக் ஷ அர­சிற்கும் சர்­வ­தே­சத்­திற்கும் வெளிப்­ப­டுத்­த­வுள்­ளனர்.

தமிழ் மக்­களின் பேர­பி­மானம் பெற்ற அர­சியல் இயக்­க­மான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு முன்னாள் உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் சி.வி.விக்கி­னேஸ்­வரனை வட மாகாண சபைக்­கான முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக தெரிவு செய்­துள்­ள­மையால் மஹிந்த ராஜ­பக் ஷ அரசு கலக்­கத்­திற்கு உள்­ளா­கி­யுள்­ளதை நாம் கண்­கூ­டாக காண முடியும்.முத­ல­மைச்­ச­ராகி அவர் நடத்தப் போகும் சட்ட ரீதி­யான, ஜன­நாயக ரீதி­யான போராட்­டங்கள் கலங்கி நிற்கும் தமிழ் பேசும் மக்­க­ளுக்கு காவ­ல­ர­ணாக நம்­பிக்கை ஒளி­யாக நிச்­சயம் திகழும்.

எமது தமிழ்த் தேசி­யத்தின் பெருந்­த­லை­வ­ரான இரா. சம்­பந்தன் எடுத்த வட மாகாண முத­ல­மைச்சர் வேட்­பா­ளரை தெரிவு செய்யும் இந்த தீர்க்­க­த­ரி­ச­ன­மான தீர்­மா­னமும் சி.வி. விக்கி­னேஸ்­வ­ரனா? மாவை சேனா­தி­ரா­சாவா? வட மாகாண முத­ல­மைச்சர்  வேட்­பாளர் என்ற வாதப் பிர­தி­வா­தங்கள் இடம்­பெற்ற அதி முக்­கி­ய­மான தரு­ணத்தில் தமி­ழினத் தொண்­ட­னான தியாகி – மாவை சேனா­தி­ராசா தனது இனத்தின் நலனை மேல் என்று விட்டுக் கொடுப்பும் தியா­கமும் செய்­துள்­ளமை தமிழ்த் தேசிய அர­சியல் வர­லாற்றில் ஒரு புதிய பரி­ணா­மத்தை நிதர்­ச­ன­மாக படைக்கப் போகின்­றது. இந்த தேர்­தலில் நாம் காணும் மற்­று­மொரு வர­லா­றாக பாதிக்­கப்­பட்ட பெண்­களின் குர­லாக களம் இறங்­கி­யுள்ள வேட்­பா­ளர்கள் அமோக ஆத­ரவை பெற­வுள்­ளமை புல­னா­கின்­றது.

தமி­ழினம் வேற்­று­மையில் ஒற்­றுமை கண்டு பொது நோக்கின் அடிப்­ப­டையில் ஒன்­று­பட்ட சக்­தி­யாக களத்தில் குதித்­துள்­ளமை மாபெரும் வெற்­றிக்­கான படிக்கல் அல்­லது அடிக்கல் எனலாம். வாழ்­வதா? சாவதா? என்று மனக்காயங்களுடன் நடை ப்பிணங்களாக உலா வரும் எமது தமிழினம் தனது சிந்தனைக்கு வேலை கொடுத்து சிந்திய குருதியும் கண்ணீரும் இனியும் வேண்டாம். நாம் ஒன்று படுவோம்,ஒற்றுமையாக எமது தேசியத்தின் மீட்புக்காக வாளை விடவும் கூரிய வாக்குரிமையை தமிழின விடிவுக்காக அளிப்போம் என்றார்

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com