Home » » முகவரிகள் தெளிவின்மையால் ஆனையிறவில் வாக்காளர் அட்டைகள் விநியோகத்தில் தடை!

முகவரிகள் தெளிவின்மையால் ஆனையிறவில் வாக்காளர் அட்டைகள் விநியோகத்தில் தடை!

போரினால் இடம்பெயர்ந்து மீள்குடியேற்றம் செய்யப்படாத ஆனையிறவு கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட சுமார் 226 குடும்பங்களைச் சேர்ந்த 477 வாக்காளர்களுக்கு முகவரி தெளிவின்மையினால் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படாத நிலையில் தட்டுவன்கொட்டி உப அஞ்சல் அலுவலகத்தில் தேங்கிக் கிடப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது .

ஆனையிறவு கிராம அலுவலர் பிரிவில் தட்டுவன்கொட்டி, உமையாள்புரம் கிராமங்களில் மக்கள் மீள்குடியமர்ந்துள்ளனர். ஆனால் ஆனையிறவு, உப்பளம், சின்ன உப்பளம், நாவற்கொட்டியான் கிராமங்களில் இன்னமும் மக்கள் மீளக்குடியமரவில்லை.

 இடம்பெயர்ந்து தங்கியுள்ள இடங்களின் முகவரிகளை உப அஞ்சலதிபருக்கு மக்கள் அறிவிக்காமையினாலும் 226 குடும்பங்களைச் சேர்ந்த 477 வாக்காளர் அட்டைகள் அஞ்சற்காரர்களினால் விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 எனவே இப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து வேறு இடங்களில் தங்கியுள்ள வாக்காளர்கள் வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்குரிய வாக்காளர் அட்டைகளை தட்டுவன்கொட்டி உப அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று பெற்றுக் கொள்ளுமாறு உப அஞ்சல் அதிபர் அறிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com