Home » , » அடுத்த வார இறுதியில் தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கை வருகை

அடுத்த வார இறுதியில் தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கை வருகை

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைத் தேர்தல்களை கண்காணிக்கும் பொருட்டு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த தேர்தல் கண்காணிப்பாளர்கள் அடுத்தவார இறுதியில் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.

 இதனை தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். பொதுநலவாய, ஆசியான் தேர்தல் கண்காணிப்பு அதிகாரசபை மற்றும் தெற்காசிய தேர்தல் அதிகார சபை ஆகியவற்றின் அதிகாரிகளே தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

 இந்தியாவிலிருந்து 9 கண்காணிப்பாளர்களும், பாகிஸ்தானிலிருந்து ஐவரும், பங்களாதேஷிலிருந்து 3 பேரும், மாலைதீவு மற்றும் நேபாளத்திலிருந்து தலா இரண்டு பேரும், பூட்டான் மற்றும் ஆப்கானிலிருந்து தலா ஒருவரும் தேர்தல் கண்காணிப்பாளர்களாக செயற்படவுள்ளனர்.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com