Home » , » பெப்ரல் சார்பில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் எட்டு பேர் வடக்கில் பணியில் ஈடுபட்டுள்ளனர்: ஹெட்டியாராச்சி

பெப்ரல் சார்பில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் எட்டு பேர் வடக்கில் பணியில் ஈடுபட்டுள்ளனர்: ஹெட்டியாராச்சி

வட மாகாண சபைத் தேர்­தலை கண்­கா­ணிப்­ப­தற்­கென சர்­வ­தேச தேர்தல் கண்­கா­ணிப்­பா­ளர்கள் எட்டுப் பேரை வர­வ­ழைத்­துள்­ள­தா­கவும் அவர்கள் கடந்த 15 ஆம் திக­தியே வடக்கில் கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­களை ஆரம்பித்­துள்­ள­தா­கவும் பெப்­ரல் அமைப்பின் நிறை­வேற்று பணிப்­பாளர் ரோஹன ஹெட்­டி­யா­ராச்சி தெரி­வித்தார். 

மேலும் பெப்ரல் அமைப்­பா­னது வடக்கு மற்றும் வடமேல், மத்­திய மாகாண சபைத் தேர்தலை கண்­கா­ணிப்­ப­தற்­கென உள்­நாட்டு 4500 கண்­கா­ணிப்­பா­ளர்­களை ஈடு­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் அவர் கூறினார். வடக்கு மற்றும் வடமேல், மத்­திய மாகாண சபைத் தேர்தல் கண்­கா­ணிப்புத் தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

 ரோஹன ஹெட்­டி­யா­ராச்சி இந்த விடயம் குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில்; நடை­பெ­ற­வுள்ள வட மாகாண, சபை வடமேல் மற்றும் மத்­திய, மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தலை கண்­கா­ணிப்­ப­தற்­கான செயற்­பா­டு­களை பெப்ரல் அமைப்பு முன்­னெ­டுத்­துள்­ளது. அந்த வகையில் இம்­முறை வடக்குத் தேர்­தலை கண்­கா­ணிப்­ப­தற்­கென வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து எட்டு கண்­கா­ணிப்­பா­ளர்­களை வர­வ­ழைத்­துள்ளோம்.

 இந்­தியா, ஜப்பான், தாய்­லாந்து, பங்­க­ளாதேஷ், நேபாளம் உள்­ளிட்ட நாடு­களில் இருந்து எட்டு கண்­கா­ணிப்­பா­ளர்­களை பெப்ரல் அமைப்பு வர­வ­ழைத்­துள்­ள­துடன் அவர்­களை கடந்த 15 ஆம் திக­தி­யி­லி­ருந்து கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­களில் வடக்கில் ஈடு­ப­டுத்­தி­யுள்­ளது. தேர்தல் முடி­யும்­வரை இந்த சர்­வ­தேச கண்­கா­ணிப்­பா­ளர்கள் வடக்கில் தேர்தல் கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வார்கள்.

 இதே­வேளை உள்­நாட்டு கண்காணிப்பாளர்கள் 4500 பேரையும் பெப்ரல் அமைப்பு கண்காணிப்பில் ஈடுபடுத்தியுள்ளது. குறிப்பாக வடக்கு மாகாணத்துக்கு 1300 உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com