Home » » வட மாகாணத்தில் 832 வாக்களிப்பு நிலையங்களில் நாளை வாக்களிப்பு

வட மாகாணத்தில் 832 வாக்களிப்பு நிலையங்களில் நாளை வாக்களிப்பு

வட மாகா­ண­ச­பையின் 5 மாவட்­டங்­க­ளிலும் அமைக்­கப்­பட்­டுள்ள 832 வாக்­க­ளிப்பு நிலை­யங்­களில் நாளை சனிக்­கி­ழமை தேர்தல் வாக்­க­ளிப்பு நடை­பெ­ற­வுள்­ளது. 

 வட மாகாண சபை, வடமேல் மற்றும் மத்­திய மாகாண சபை­க­ளுக்­கான 10 மாவட்­டங்­க­ளிலும் அமைக்­க­பட்­டுள்ள 3712 வாக்­க­ளிப்பு நிலை­யங்­களில் நடை­பெறும் வட மாகா­ணத்தைப் பொறுத்த மட்டில் ஐந்து மாவட்­டங்­க­ளிலும் 832 வாக்­க­ளிப்பு நிலை­யங்­களில் யாழ்ப்­பாண மாவட்­டத்தில் 528 வாக்­க­ளிப்பு நிலை­யங்­களும் கிளி­நொச்சி மாவட்­டத்தில் 95 வாக்­க­ளிப்பு நிலை­யங்­களும் மன்னார் மாவட்­டத்தில் 70 வாக்­க­ளிப்பு நிலை­யங்­களும் அமைக்­கப்­பட்­டுள்­ளன. 


 மேலும் முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் 55 வாக்­க­ளிப்பு நிலை­யங்­களும் வவு­னியா மாவட்­டத்தில் 89 வாக்­க­ளிப்பு நிலை­யங்­களும் அமைக்­கப்­பட்டு தேர்தல் வாக்­க­ளிப்பு நடை­பெ­ற­வுள்­ளது. இதே­வேளை, 3712 வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளி­னதும் பாது­காப்­புக்­காக 7500 பொலிஸார் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர்.

 வடக்கு, வடமேல் மற்றும் மத்­திய மாகாண சபை­க­ளுக்கு 142 உறுப்­பி­னர்­களை தெரிவு செய்யும் நோக்கில் 43 இலட்­சத்து 58 ஆயி­ரத்து 261 பேர் வாக்­க­ளிக்க தகுதி பெற்­றுள்­ளனர். மூன்று மாகாண சபை­க­ளுக்­கு­மான தேர்­தலை நடத்த சமார் 1500 மில்­லியன் ரூபா செல­வி­டப்­படும் என மதிப்­பிடப்­பட்­டுள்­ளது. வடக்கு வடமேல் மற்றும் மத்­திய மாகாண சபை­க­ளுக்கு 142 உறுப்­பி­னர்­களை தெரிவு செய்ய தேர்­தலில் அர­சியல் கட்­சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 3785 வேட்­பா­ளர்கள் கள­மி­றங்­கி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com