Home » , , » வடமாகாண ஆளுநர் சந்திரசிறி முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு கடிதம்! கலந்துரையாட வருமாறு அழைப்பு

வடமாகாண ஆளுநர் சந்திரசிறி முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு கடிதம்! கலந்துரையாட வருமாறு அழைப்பு

வடக்கு மாகாண சபையின் எதிர்­கால செயற்­றிட்­டங்கள் தொடர்­பாகவும் பிணக்­குகள் தொடர்­பா­கவும் கலந்­து­ரை­யா­டு­வ­தற்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொள்­ளு­மாறு வட­மா­காண ஆளுநர் ஜீ.ஏ.சந்­தி­ர­சிறி முத­ல­மைச்சர் சீ.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்கு நேற்று முன்­தினம் மாலை கடிதம் ஒன்­றினை அனுப்­பி­வைத்­துள்ளார். 

வடக்கு மாகாண சபையின் செயற்­பா­டு­க­ளுக்கு வடக்­கு­ மா­காண சபையின் அதி­கா­ரிகள் பல்­வேறு தடை­களைப் பிர­யோ­கிப்­ப­தா­கவும் வட­மா­காண ஆளு­நரை மாற்ற வேண்டும் எனவும் முத­ல­மைச்சர் தெரி­வித்­துள்ள நிலையில் ஆளுநர் இக்­க­டி­தத்­தினை அனுப்­பி­வைத்­துள்ளார். 

 ஆளு­நரின் அக்­க­டி­தத்தில், வடக்கு மாகாண சபையின் 2014ஆம் ஆண்­டுக்­கான செயற்­பா­டுகள் தற்­போதை நிர்­வாகச் சிக்­கல்கள் தொடர்­பாக கலந்­து­ரை­யா­டு­வ­தற்­கான ஏற்­பா­டு­களை விரை­வாக மேற்­கொள்­ளு­மாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

 ஆளு­நரின் இக்­க­டிதம் முத­ல­மைச்­ச­ருக்கு நேரில் சேர்­பிக்­கப்­பட்­டுள்­ளது இருந்­த­போ­திலும் இதற்­கான பதிலை இன்­னமும் முத­ல­மைச்சர் ஆளு­ந­ருக்கு அனுப்­ப­வில்லை என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com