வடக்கு மாகாண சபையின் எதிர்கால செயற்றிட்டங்கள் தொடர்பாகவும் பிணக்குகள் தொடர்பாகவும் கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு நேற்று முன்தினம் மாலை கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளார்.
வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகளுக்கு வடக்கு மாகாண சபையின் அதிகாரிகள் பல்வேறு தடைகளைப் பிரயோகிப்பதாகவும் வடமாகாண ஆளுநரை மாற்ற வேண்டும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ள நிலையில் ஆளுநர் இக்கடிதத்தினை அனுப்பிவைத்துள்ளார்.
ஆளுநரின் அக்கடிதத்தில், வடக்கு மாகாண சபையின் 2014ஆம் ஆண்டுக்கான செயற்பாடுகள் தற்போதை நிர்வாகச் சிக்கல்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகளை விரைவாக மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநரின் இக்கடிதம் முதலமைச்சருக்கு நேரில் சேர்பிக்கப்பட்டுள்ளது இருந்தபோதிலும் இதற்கான பதிலை இன்னமும் முதலமைச்சர் ஆளுநருக்கு அனுப்பவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment