Home » , , » கூட்டமைப்பின் ஆசனப் பங்கீடு இறுதிமுடிவு இன்று எட்டப்படும்; நேற்றைய கூட்டத்திலும் இழுபறி

கூட்டமைப்பின் ஆசனப் பங்கீடு இறுதிமுடிவு இன்று எட்டப்படும்; நேற்றைய கூட்டத்திலும் இழுபறி

வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளுக்கான ஆசனப் பங்கீட்டு விபரங்கள் வவுனியாவில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இறுதிசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் நேற்றும் வவுனியா மாவட்டத்துக்கான ஆசனப் பங்கீடு தொடர்பில் இரு கட்சிகளின் இறுக்கமான நிலைப்பாட்டினால் முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.


 இது தொடர்பில் இறுதி முடிவு எட்டுவதற்காக இன்று மாலை யாழ். மாவட்டத்திலுள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இதுவரை எட்டப்பட்ட முடிவுகளின் பிரகாரம் யாழ். மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு 7 ஆசனங்களும், ஈ.பி.ஆர்.எல்.எவ் 4 ஆசனங்களும், ரெலோ 3 ஆசனங்களும், புளொட் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தலா 2 ஆசனங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

 கிளிநொச்சி மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தலா 3 ஆசனங்களும், ஈ.பி.ஆர்.எல்.எவ் ஓர் ஆசனமும் ஒதுக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி, ரொலோ மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் தலா 2 ஆசனங்களும் தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் புளொட்டுக்கு தலா ஓர் ஆசனமும் ஒதுக்கப்பட்டுள்ளன. மன்னார் மாவட்டத்தில் ரெலோ 3 ஆசனங்களும், இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் தலா 2 ஆசனங்களும் புளொட்டுக்கு ஓர் ஆசனமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

 இருப்பினும் மன்னார் மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆசனம் ஒன்றைக் கேட்டபதனால் இது தொடர்பில் இறுதி முடிவு செய்யப்படவில்லை. வவுனியா மாவட்டத்தைப் பொறுத்த வரையில் ஈ.பி.ஆர்.எல்.எவ் ரெலோ ஆகிய கட்சிகள் தலா 3 ஆசனங்களைக் கோருவதால் இழுபறி நிலைமை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்றைய தினம் இறுதி முடிவு எட்டப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com