Home » » நாடு இராணுவ மயமாகியுள்ளது; முன்னிலை சோசலிஷ கட்சி குற்றச்சாட்டு

நாடு இராணுவ மயமாகியுள்ளது; முன்னிலை சோசலிஷ கட்சி குற்றச்சாட்டு

சாதாரண மக்கள் வாழ்க்கையில் கூட இராணுவ தலையீட்டை ஏற்படுத்தி நாடு முழுவதும் இராணுவ மயமாக்கப்பட்டுள்ளதாக முன்னிலை சோசலிஷ கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

அதற்கு சிறந்த உதாரணம் குடிநீர் கோரிய பொது மகன் ஒருவர் வெலிவேரிய பிரதேசத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் என அக் கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்துபஸ்வல மக்கள் மீது அரசாங்கம் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு முன்னிலை சோசலிஷ கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

தமது குடிநீரில் இரசாயனம் கலந்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால் மக்களின் போராட்டத்தை அடக்குவதற்கு அரசாங்கம் மீலேட்சைத்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டுக்கு எதிராக அனைத்து சக்திகளும் ஒன்று திரள வேண்டும் என அக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com