ஓமந்தை, நொச்சிகுளம் ஆதி விநாயகர் கோயிலடியில் இடம்பெற்ற மக்களுடனான கலந்துரையாடலில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர் திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) மற்றும் ஊர்ப் பிரமுகர்கள், வட மாகாணசபைத் தேர்தலில் மக்கள் மிகவும் அக்கறையெடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கே வாக்களித்து கூட்டமைப்பின் பெரும்பான்மை வெற்றியை உறுதி செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர்.
இதேவேளை நேற்றுமாலை 4 மணியளவில் வவுனியா மதுராநகர் கண்ணகி விளையாட்டுக் கழகத்தில் விளையாட்டுக் கழகத் தலைவர் மற்றும் அங்கத்தவர்களுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர் திரு. க.சந்திரகுலசிங்கம் (மோகன்), பிரதேச சபை உறுப்பினர் ராஜசேகர் ஆகியோர் தேர்தல் குறித்த விரிவான கருத்தரங்கொன்றினை நடத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment