Home » , , » கூட்டமைப்பிடம் பிரிட்டன் தமிழர் பேரவை கோரிக்கை

கூட்டமைப்பிடம் பிரிட்டன் தமிழர் பேரவை கோரிக்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் பிரிட்டன் தமிழர் பேரவை கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. சுயாட்சி அதிகாரங்ளை பெற்றுக் கொள்ளல், போர்க் குற்றச் செயல் தொடர்பில் சர்வதேச விசாரணை, வடக்கு கிழக்கு சிங்களக் குடியேற்றங்களை அகற்றுதல் மற்றும் வடக்கு கிழக்கிற்கு இடைக்கால நிர்வாகமொன்றை நிறுவுதல் ஆகிய கோரிக்கைகள் இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ளன.

 இந்த நான்கு கோரிக்கைகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் வாக்குறுதிகளில் உள்ளடக்க வேண்டுமென பிரிட்டன் தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.

 குறித்த கோரிக்கைகளை தேர்தல் வாக்குறுதியில் உள்ளடக்காவிட்டால், தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என பிரிட்டன் தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 வடக்கு கிழக்கிலிருந்து சிங்களவர்களை வெளியேற்ற வேண்டும் என்பதே பிரதான கோரிக்கையாக அமைந்துள்ளது.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com