Home » » வாக்களிப்பு மையங்களின் தலைமை உத்தியோகஷ்த்தர்களாக கிழக்கு மாகாண அதிகாரிகள்

வாக்களிப்பு மையங்களின் தலைமை உத்தியோகஷ்த்தர்களாக கிழக்கு மாகாண அதிகாரிகள்

வடக்கு மாகாணசபை தேர்தலின் போது வாக்களிப்பு மையங்களின் தலமை உத்தியோகஷ்த்தர்களாக கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலிருந்து சிங்கள, முஸ்லிம் அதிகாரிகள் வரவளைக்கப்பட்டுள்ளதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முற்றாக நிராகரிக்கின்றது.

சிறிலங்கா அரசாங்கம் வடக்குமாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை தேற்கடிக்க போடப்பட்டுள்ள திட்டமே மேற்படி அதிகாரிகளின் வருகை என்றும் மேலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேற்படிக் குற்றச்சாட்டினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பேச்சாளருமாக சுரேஸ்பிரேமச்சந்திரனே முன்வைத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்.

வடக்கு,கிழக்கு மாகாணங்களிலும் அதற்கு வெளியேயும் வாக்களிப்பு நிலையங்களில் தலமை தாங்கும் தகுதியுள்ள அதிகளவான சிரேஷ்ட தமிழ் அதிகாரிகள் உள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலிருந்து எதற்காக அதிகாரிகள் வரவழைக் கப்படவேண்டும்?

அதுவும் சிங்கள, முஸ்லிம் அதிகாரிகள் எதற்காக வரவழைக்கப்படுகின்றார்கள்? எனவே இந்த அதிகாரிகளின் வருகையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு கடுமையான சந்தேகம் கொ ண்டிருக்கின்றது. ஒருவேளை அரசாங்கத்திற்கு ஆதரவாள அதிகாரிகளை அழைத்து வ ந்து கபடத்தனமான தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிடலாம்.

ஏனெனில் இந்தத் தேர்தலை பொறுத்தவரையில் அந்த அதிகாரி எடுப்பதே இறுதியான முடிவு. அந்த நிலையில் கொண்டுவரப்படும் அதிகாரிகள் எதற்காக கொண்டு வரப்படுகின்றார்கள் என்பது எங்கள் கேள்வி, சிலவேளை இறுதி நேரங்களில் கள்ள வா க்குகளை கூட

யாரும் போடலாம். அவ்வாறு போட்டால் அங்குள்ள ஏனைய அதிகாரிகள் வாய் மூடி இருக்கவேண்டும். எனவே இவ்வாறான விடயங்களை தேர்தல் ஆணையகம் மேற்கொ ள்வதை தமிழ்தேசிய கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்பதை நாம் தேர்தலகள் ஆணையகத்திற்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.

தமிழ் உத்தியோகத்தர்கள் உள்ளபோது தமிழ் தெரியாதவர்களை கொண்டுவருவது எதற் காக? அரசுக்கு சாதகமாக இருக்கும் ஊழியர்கள் என்ற சந்தேகம் எமக்குள்ளது. அம்பாறை சிங்கள மக்கள் குடியேற்றப்பட்ட ஒரு மாவட்டம். அந்த மாவட்டத்திலிருந்து அதிகாரிகளை

கொண்டுவருவது பல இடர்பாடுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். மேலும் யாழ்.கோப்பாய், இருபாலை பகுதிகளில் வீடு வீடாகச் செல்லும் சிலர் வேலைவாய்ப்பிற்கான விண்ணப்ப படிவங்களை வழங்குகின்றார்கள். அதன் மூலம் வேலைவாய்ப்பு வழங்கப்படுமாம்.

எனவே இவ்வாறான விடயங்களை தேர்தல்கள் திணைக்களம் உடனடியாக நிறுத்தவே ண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com