Home » , » வேட்பாளர் செவ்வேளின் அலுவலகம் மீது தாக்குதல்; பதாதைகள் மீது கழிவொயில் வீச்சு

வேட்பாளர் செவ்வேளின் அலுவலகம் மீது தாக்குதல்; பதாதைகள் மீது கழிவொயில் வீச்சு

வட மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுகந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர் செவ்வேளின் அலுவலகத்தின் மீது இனந்தெரியாத மர்மநபர்கள் நேற்று அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளனர். அதிகாலை ஒரு மணியளவில் இவ் அலுவலகத்திலில் வாகனத்தில் சென்ற ஆயுததாரிகள் செவ்வேளின் அலுவலகத்திற்குள் அத்துமீறி உள்நழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 இவருடைய வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதல் தாரிகள் செவ்வேளின் புகைப்படங்கள் மீதும் கறுப்பு மைபூசி சேதப்படுத்தியுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது தேர்தல் திணைக்களத்திலும் முறையிடப்பட்டுள்ளது.

 இச்சம்பவங்கள் தொடர்பாக வேட்பாளர் செவ்வேளிடம் கேட்டபொழுது, இத்தகைய தாக்குதல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது இயலாதவர்களின் வெளிப்பாடாகும். மக்களை அச்சமான சூழலுக்குள் வைத்திருக்கும் நோக்குடனேயே சிலர் இத்தகைய தீயசெயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். எனவே இத்தகைய தாக்குதல்தாரிகளைச் சட்டத்தின் முன்நிறுத்தி தண்டிக்கவேண்டும் என்றார்.



0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com