Home » , » வடக்கில் கடும் போட்டி நிலவும்: ஐ.ம.சு.மு

வடக்கில் கடும் போட்டி நிலவும்: ஐ.ம.சு.மு

வட மாகாணசபை தேர்தலில் கடுமையான போட்டி நிலைமை காணப்படுவதாகவும் மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெல்வது நிச்சயமானது என அமைச்சர் டளஸ் அழகபெரும தெரிவித்தார்.

 வட மாகாணத்திலுள்ள 14 தேர்தல் தொகுதிகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நான்கிலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஐந்திலும் நிச்சயமாக வெற்றிபெறுமென்று அவர் கூறினார். ஊசலாடும் நிலையிலுள்ள 5 தொகுதிகளில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு இடையிலும் கடும் போட்டி காணப்படுவதாகும்.

இந்த தொகுதிகளை வெல்பவர்களே வட மாகாணசபையை கைப்பற்றுவர் என்றும் அவர் கூறினார். தேர்தல் சட்டங்களை கடைப்பிடிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்களுக்கு கூறியுள்ளார். சட்டங்களை மீறுவோர் கடுமையாக தண்டிக்கப்படுவர் என்றும் அவர் கூறினார்.


0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com