அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் 39 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் முறைப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. அரச ஊழியர்கள் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 42 ஆக உயர்வடைந்துள்ளது.
இதனைத் தவிர அரச கட்டடங்கள் தேர்தல் நடவடிக்கைகளுக்காக தவறான முறையில் பயன்படுத்தப்பட்டமை மற்றும் பிரசார பதாகைகள் காட்சிபடுத்தப்பட்டமை தொடர்பில் 45 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. தேர்தல் வன்முறை தொடர்பிலும் 26 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் முறைப்பாட்டுகள் அலுவலகம் தெரிவித்துள்ளது






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment