Home » » விக்கினேஸ்வரனின் திட்டம் பலிக்காது : பொதுபல சேனா

விக்கினேஸ்வரனின் திட்டம் பலிக்காது : பொதுபல சேனா

முப்பது வருடங்களுக்கு முன்னர் இருந்த வட மாகாணமே எமக்கு வேண்டும். பிரிவினை வாதத்தினை நாம் தோற்றுவிக்கவும் இல்லை பிரிவினைக்கு இடமளிக்கப்போவ­து­மில்லை என பொது­ப­ல­சேனா தெரி­வித்­துள்­ளது. மேலும் விக்கி­னேஸ்­வ­ரனின் திட்டம் ஒரு போதும் பலிக்கப் போவ­தில்லை. தமிழர், முஸ்­லிம்­களை ஆத­ரிக்கும் அமைப்­பாக நாம் செயற்­பட்டு நாட்டை ஒற்­று­மை­யாக வைத்­தி­ருப்போம் எனவும் அவ் அமைப்­பினர் தெரி­வித்­தனர். 

 பொது­பல சேனா­வினால் நேற்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவ் அமைப்­பினர் மேற்­கண்­ட­வாறு கருத்துத் தெரி­வித்­தனர். இது தொடர்­பாக பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞானசார­தேரர் கருத்துத் தெரி­விக்­கையில், பிர­பா­கரன் வடக்கின் தீவி­ர­வாத முன்­ன­ணி­யா­கவும் ருத்­ர­கு­மாரன், அன்டன் பால­சிங்கம் ஆகியோர் புலம்­பெயர் தமிழர் முன்­ன­ணி­யா­கவும் செயற்­பட்­டுள்­ளனர்.

 அதே வழியில் இன்று நவ­நீ­தம்­பிள்ளை சர்­வ­தேசம் சார்­பா­கவும் விக்கி­னேஸ்­வரன் பிரி­வினை வாத முன்­ன­ணி­யா­க­வுமே செயற்­ப­டு­கின்­றனர். அன்று விடு­தலைப் புலிகள் செய்ய முடி­யா­ததை இன்று நவிப்­பிள்ளை, விக்கி­னேஸ்­வரன் செய்ய முயன்­றாலும் அதற்கு நாம் ஒரு­போதும் இட­ம­ளிக்க போவ­தில்லை. மேலும் நாம் தமிழ், முஸ்லிம் மக்­களை ஆத­ரித்தே செயற்­ப­டு­கின்றோம். இலங்­கையில் முஸ்­லிம்கள் மீது சிறு காயத்தைக் கூட நாம் விளை­விக்­க­வில்லை. அதற்­கான ஆதா­ரங்­களும் உள்­ளன. 

 அரே­பிய நாடுகள் எமது பெளத்த அமைப்­பிற்கும் இலங்­கையின் பெளத்த மக்­க­ளுக்கும் கறுப்புச் சாயம் பூசி கிழக்­கினை அரே­பிய நாடாக மாற்ற நினைக்­கின்­றன. சர்­வ­தேச தீவி­ர­வா­தி­களும் இலங்­கையில் உள்ள தீவி­ர­வாத அர­சியல் தலை­வர்­களும் ஒன்­றி­ணைந்து கிழக்கு வாழ் முஸ்­லிம்­களை மட்­டு­மன்றி ஒட்டு மொத்த முஸ்­லிம்­க­ளையும் தீவி­ர­வா­தி­க­ளாக மாற்றி நாட்டை சீர­ழிக்க நினைக்­கின்­றனர். மேலும் இலங்­கையில் பெளத்த மதமும், பெளத்த மதக் கொள்­கை­களும் அழிந்­து­கொண்டே செல்­கின்­றன.

 அன்று எமது பெளத்த மதத்தைக் காப்­பாற்­றிய தர்­ம­பா­லவைப் போன்று இன்றும் லட்­சக்­க­ணக்­கான தர்­ம­பா­லாவை உரு­வாக்க வேண்டும் எமது கொள்­கை­க­ளுக்­கா­கவும் பெளத்­தர்கள் வாழ வேண்டும். எனவே எதிர்காலத்தில் அனைத்து பெளத்த அமைப்புக்களையும் ஒன்றிணைத்து அந காரிக தர்மபாலவின் கொள்கையுடைய பெளத்தர்களை உருவாக்கி நாட்டில் உள்ள தீவிரவாதத்தினை அழித்துக்காட்டுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.




0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com