Home » » யாழில் இடம்பெயர்ந்த மக்களுக்கு வாக்களிப்பு நிலையங்கள்: சர்வதேச கண்காணிப்புக் குழுவினர் அதிர்ச்சி

யாழில் இடம்பெயர்ந்த மக்களுக்கு வாக்களிப்பு நிலையங்கள்: சர்வதேச கண்காணிப்புக் குழுவினர் அதிர்ச்சி

யாழ்ப்பாணத்தில், இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு வாக்களிக்க உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படாதது குறித்து சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

 தற்போது யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழுவினர், காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் பதிவு செய்யப்பட்ட 11 ஆயிரம் வாக்காளர்கள் இடம்பெயர்ந்துள்ளனர் எனவும் அவர்கள் வாக்களிப்பு நிலையங்களை அடைவதில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

 மேலும், இக் காண்காணிப்புக் குழுவினர் யாழ்ப்பாணத்தில் தேர்தல் ஆணையம் ஒழுங்கு செய்துள்ள வாக்களிப்பு நிலையங்களைப் பார்வையிட்டதுடன், அங்கு வாக்களிக்கச் செல்வதற்கு வாக்காளர்களுக்கு வசதியுள்ளதா என்பதையும் ஆய்வு செய்தனர். இதையடுத்து கருத்து வெளியிட்ட கண்காணிப்பாளர் ஒருவர் கூறுகையில், காங்கேசன்துறைத் தொகுதியில் உள்ள 11 ஆயிரம் இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிப்பதற்கு ஏற்றவகையில் வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படவில்லை.

 இவர்களில் பலர் தாம் வதியும் இடத்தில் இருந்து வாக்களிப்பு நிலையத்தை அடைய 30 கி.மீ தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. அந்த வாக்காளர்கள் இலகுவான முறையில் வாக்களிப்பதற்கு ஏற்ற வகையில் வாக்குச் சாவடிகளை அமைத்துக்கொடுக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com