Home » , » 72 மணித்தியாலங்களுக்குள் 14 தேர்தல் வன்முறை சம்பவங்கள்

72 மணித்தியாலங்களுக்குள் 14 தேர்தல் வன்முறை சம்பவங்கள்

வடக்கு வடமேல் மற்றும் மத்­திய மாகா­ண­சபை தேர்­தல்­களின் போது கடந்த 72 மணித்­தி­யா­லங்­க­ளுக்குள் 14 வன்­முறை சம்­ப­வங்கள் இடம்பெற்­றுள்­ள­தாக மனித உரி­மை­களை பாது­காப்­ப­தற்­கான ஒன்­றி­யத்தின் தேர்தல் கண்­கா­ணிப்­ப­தற்­கான வலை­ய­மைப்பு தெரி­வித்­துள்­ளது.

அத்­துடன் இது­வ­ரைக்கும் தேர்தல் விதி­மு­றை­களை மீறி­யமை தொடர்­பாக 430 முறைப்­பா­டுகள் கிடைக்கப் பெ றுள்­ள­தா­கவும் அவ்­வ­லை­ய­மைப்பு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

இது தொடர்­பாக அவ்­வ­லை­ய­மைப்பு ஊட­கங்­க­ளுக்கு விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, எதிர்­வரும் 21ஆம் திகதி வடக்கு, வடமேல் மற்றும் மத்­திய மாகாண சபை­க­ளுக்­கான தேர்தல் நடை­பெ­ற­வுள்ள நிலையில் தேர்தல் பிர­சா­ரங்கள் சூடு­பி­டித்­துள்­ளன. ஆகவே தேர்தல் வன்­முறை சம்­ப­வங்­களும் அதி­க­ரித்த வண்­ணமே உள்­ளன. இதன்­படி கடந்த 72 மணித்­தி­யா­லங்­க­ளுக்குள் 14 வன்­முறை சம்­ப­வங்கள் இடம் பெற்­றுள்­ளன.

அத்­துடன் தேர்தல் விதி­மு­றை­களை மீறி­யமை தொடர்­பாக 430 முறைப்­பா­டு­களும் கிடைக்கப் பெற்­றுள்­ளன. மேற்­படி முறைப்­பா­டு­க­ளுக்கு சட்­ட­வி­ரோ­த­மான முறையில் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டமை தொடர்­பாக 190 முறைப்­பா­டு­களும் அரச உடை­மைகள் மற்றும் அதி­கா­ரங்கள் பிர­யோ­கித்­தமை தொடர்­பாக 113 முறைப்­பா­டு­களும் கிடைக்கப் பெற்­றுள்­ள­துடன் தேர்தல் வன்­முறை சம்­ப­வங்கள் தொடர்­பான முறைப்­பா­டுகள் 40 கிடைக்க பெற்­றுள்­ளன.

இவ்­வாறு கிடைக்கப் பெற்ற 14 வன்­முறை சம்­ப­வங்­களில் கண்டி மாவட்ட ஐ. தே. க. வேட்­பாளர் லலித் ரண­ரா­ஜாவின் காரி­யா­ல­யத்தின் மீது கெப் வண்­டியில் வந்த இனந்­தெ­ரி­யாத சிலர் துப்­பாக்கி பிர­யோகம் நடத்­தி­யுள்­ளமை தொடர்­பான முறைப்­பா­டு­களும் அடங்­கு­கின்­றன.

இதே­வேளை குரு­நாகல் மாவட்­டத்தின் மக்கள் விடு­தலை முன்­ன­ணியில் இரண்டு காரி­யா­ல­யங்­க­ளுக்கு இனந்­தெ­ரி­யாதோர் தாக்­குதல் நடத்­தி­யுள்­ள­தா­கவும் முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்­றன.

அத்­துடன் மாத்­தளை நகரில் நேற்று முன்­தினம் ஒரு மணி­ய­ளவில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் வேட்­பாளர் சின்தன ஏக்கநாயக்கவின் ஆதரவாளர்களுக்குமிடையில் மோதல் ஒன்றும் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் மேற்படி முறைப்பாடுகள் தொடர்பாக உரிய நடவடிக்கையை பொலிஸார் மற்றும் தேர்தல் செயலகம் எடுக்க வேண்டுமென அவ்வலையமைப்பு வலியுறுத்தியுள்ளது.


0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com