வடக்கு மாகாணமக்கள் முப்பது வருடகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் வாழ்வாதாரம் குறித்து பேசாத கூட்டமைப்பு சுயநிர்ணய உரிமையை மட்டும் பேசுவது தவறானதாகும். கூட்டமைப்பின் இத்தகைய போக்கு கவலை தருகின்றது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். வடமாகாணசபை தேர்தலை நடத்துகின்றமையே எமக்கு பெரிய வெற்றியாகும். வடமாகாணசபை தேர்தலின் முடிவு எனக்கு நன்கு தெரியும்.
அதனை நான் இப்போது கூறமாட்டேன். அவ்வாறு கூறினால் அதனை நீங்கள் பெரிய எழுத்துக்களில் போட்டுவிடுவீர்கள் முன்னரைவிட வடக்குத் தேர்தலில் கூடியளவு வாக்குக்களை பெற்றாலே அது எமக்கு பெரிய வெற்றியாகும். முன்னரைவிட நல்லதொரு நிலை அங்கு காணப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேசிய தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்களை ஜனாதிபதி செயலகத்தில் நேற்று சந்தித்து ஜனாதிபதி கலந்துரையாடினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment