வட மாகாண சபை தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் மாகாண சபைக்கான கூட்டங்கள் நடத்துவதற்க்கான
இடங்கள் எதுவும் இதுவரை தெரிவு செய்யப்படாத நிலமையே காணப்படுகின்றது .
வடக்கு கிழக்கு மாகாண சபை 1990 ம்ஆண்டு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து திருகோணாமலை மாவட்டத்தில் ஆளுனரின் கட்டுப்பாட்டின் கீழ் வடக்கு கிழக்கு மாகாண சபை தனி மனித முடிவுகளின் அடிப்படையில் இயங்கி வந்தது .
2007 ம்ஆண்டு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் வடக்கு கிழக்கு மாகாண சபை பிரிக்கப்பட்டபோதிலும் கூட வட மாகாண சபை யாழ் மாவட்டத்திற்க்கு மாற்றப்பட்டு தினைக்களங்கள் யாவும் தனியார் இல்லங்களில் இயங்கி வருகின்றது .
ஆனாலும் வட மாகாண சபை மக்களுடைய பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படும் சந்தர்ப்பத்தில் எங்கு இயங்குவது என்பது பற்றி வட மாகாண ஆளுனரும் கவனம் எடுக்கவில்லை மாகாண சபையின் அரச உயர் அதிகாரிகளும் கூட கவனம் எடுக்கவில்லை
வட மாகாண சபை கட்டடிடங்கள் வசதி வாய்ப்புக்களை எதிர் பாராமல் உடனடியாக பொது இடத்திலேனும் கூட்டப்பட வேண்டும் என்பதே பொது மக்களுடைய விருப்பம் ஆகும் .






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment